FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அழகான திரைப்படத்தில் ஒரு சிறப்பான தோற்றம்: மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்த புகைப்படங்கள்...

Updated On : 15 ஜூலை 2026, 4:52 pm IST
ஃபஹத் ஃபாசிலுடன் மாளவிகா மோகனன்
பகிர்:

நடிகை மாளவிகா மோகனன் இதயம் முரளி திரைப்படத்தில் நடித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்த திரைப்படமான இதயம் முரளி திரைப்படம் ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதில் நாயகனாக நடிகர் அதர்வாவும் நாயகிகளாக ப்ரீத்தி முகுந்தன், கயாது லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர். காதல், நகைச்சுவை, எமோஷனல் காட்சிகளால் இப்படத்தின் கதை உருவாகியிருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

Advertisement

Advertisement

இருந்தும், இப்படத்திற்கு டிக்கெட் விற்பனைகள் கணிசமாக அளவில் விற்பனையாகி வருகிறது. இதனால், இப்படம் இதுவரை ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், அப்பதிவில், “ஒரு அழகான திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தேன். எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம் தமிழ் மணப்பெண் தோற்றத்தில் நடித்தது.

நடிகர் ஃபஹத் ஃபாசில் நீண்ட கால நண்பரென்பதால் இருவரும் இணைந்து நடிக்கத் திட்டமிட்டிருந்தோம். இதில் நிகழ்ந்தது. இதயம் முரளி போன்ற இளம் படக்குழுவுடன் பணியாற்றியது எனக்கு என் கல்லூரி காலத்திற்குத் திரும்பியது போல் இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Malavika Mohanan has released photos taken while she was acting in the film idhayam murali.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments