முகப்பு
செய்திகள்

வாழ்க்கையில் மறக்க முடியாத கதாபாத்திரம்... திருநங்கை அனுஸ்ரீ வேலன் நெகிழ்ச்சி!

திருநங்கை அனுஸ்ரீ வேலன் தனது முதல் திரைப்பட அனுபவம் குறித்து பேசியிருப்பதாவது...

Updated On : 7 ஜூன் 2026, 3:47 pm IST
29 படத்தின் படப்பிடிப்பில் அனுஸ்ரீ வேலன். - படங்கள்: இன்ஸ்டா / அனுஸ்ரீ வேலன்.
பகிர்:

திருநங்கை அனுஸ்ரீ வேலன் தனது முதல் திரைப்பட அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ரத்னகுமார் இயக்கிய 29 படத்தில் மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த மே.8ஆம் தேதி 29 என்ற திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இந்தப் படம் ஜூன் 5ஆம் தேதி ஓடிடியில் வெளியாகியுள்ளது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த அனுஸ்ரீ வேலன் தனது கடந்து வந்த பாதையைக் கூறி மக்களிடையே கவனம் பெற்றார். யூடியூப், இன்ஸ்டாகிராமில் இன்புளூயன்ஷராகவும் புகழ்பெற்றார்.

Advertisement

Advertisement

இவர் ரத்னகுமார் இயக்கிய 29 என்ற படத்தில் மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கிறார். ஓடிடி வெளியீடு குறித்து அவர் பேசியிருப்பதாவது:

ஸ்டோன் பென்ச் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கிய ’29’ படத்தில் அங்கம் வகித்ததுக்கு மிகவும் பெருமிதம் கொள்கிறேன். இந்தப் படத்தில் மாவட்ட ஆட்சியராக நடிக்க அற்புதமான வாய்ப்பு கிடைத்தது.

ஒரு திருநங்கையாக திரையில் மதிப்புமிக்க கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

என்னை நம்பியதற்கும் மறக்க முடியாத வாய்ப்பை ஏற்படுத்தியதுக்கும் இயக்குநர் ரத்னகுமார், துணை இயக்குநர்கள், படக்குழு அனைவருக்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். இந்தப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது இதயம் கணிந்த நன்றி.

இந்தக் கதாபாத்திரம் எனது வாழ்க்கையில் எப்போதும் சிறப்பு வாய்ந்தது. இந்தப் படத்தில் பங்கு வகித்ததுக்கு நான் உண்மையில் கௌரமாக நினைக்கிறேன் என்றார்.

summary

This role will always remain special in my life says actor transgender anusrivelan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.