சன் ஆஃப் தஞ்சை: முதல்முறை தமிழில் உருவான விடியோ கேம்!
சோழர் கால தமிழ் நிலத்தை மையப்படுத்தி புதிய விடியோ கேம் உருவாக்கப்பட்டுள்ளது குறித்து...
முழுக்க தமிழ் நிலத்தை மையப்படுத்தி புதிய விடியோ கேம் உருவாக்கப்பட்டுள்ளது.
சன் ஆஃப் தஞ்சை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விடியோ கேமுக்கான கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை பாடலாசிரியரும் மென்பொறியாளருமான மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
சென்னையை மையமாக கொண்ட ஸ்டூடியோவான அயலெட் ஸ்டூடியோஸால் உருவாக்கப்பட்ட சன் ஆஃப் தஞ்சை விளையாட்டு எக்ஸ் பாக்ஸ் எக்ஸ், பிஎஸ் 5 ஆகிய தளங்களில் வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
அரண்மனையில் வாழ்ந்துவரும் சோழ இளவரசன் விண்ணேந்திரன் பற்றிய கதையாக இந்த விடியோ கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தந்தை மரணப் படுக்கையில் இருக்க, எதிரிகள் நெருங்கி வர, அரசு வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கிறது. இதனால் சாதாரண மனிதனாக சமூகத்தில் மகனை களமிறக்கிவிடுகிறார் மன்னர். வணிகர்கள், உழவர்களோடு இருந்து நாட்டை ஆளும் தகுதி வளர்த்துகொண்டு இளவரசன் அரியணை ஏறி எதிர்களை வீழ்த்துவதே இந்த கேமின் களமாக அமைக்கப்பட்டுள்ளது.
சோழர் காலத்திய தஞ்சாவூர் நிலம், விவசாயம், காடுகளை காட்சிப்படுத்தும் வகையில் கிராஃபிக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில வசனங்களுடன் இந்த கேம் வெளியாகவுள்ளது. இதனால் சர்வதேச அளவில் தமிழ் கேம் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகியுள்ள இந்த கேமின் முன்னோட்ட விடியோ ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.