முகப்பு
செய்திகள்

பேச்சில்லாமல் செய்யும் சில தருணங்கள்... முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சினேகா!

நடிகை சினேகா முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு கூறியிருப்பதாவது...

Updated On : 9 ஜூன் 2026, 8:34 pm IST
முதல்வர் விஜய்யுடன் சினேகா, அவரது கணவர். - படம்: இன்ஸ்டா / சினேகா.
பகிர்:

நடிகை சினேகா முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு, “சில தருணங்கள் நம்மை பேச்சில்லாமல் செய்யும்” எனக் கூறியுள்ளார்.

நடிகராக இருந்த விஜய் தற்போது தமிழகத்தின் முதல்வராக முன்னேறியுள்ளார். பெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படைப் பிரிவை முதல்வா் ஜோசப் விஜய் இன்று தொடக்கி வைத்தார்.

சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகை சினேகா தனது குடும்பத்தினர் இன்று விஜய்யை சந்தித்தார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:

Advertisement

Advertisement

விஜய் சாருடன் இரண்டு படங்கள் பணியாற்றியிருக்கிறேன். இன்று தமிழகத்தின் முதல்வராக அவரைப் பார்க்கும்போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. சில தருணங்கள் நம்மை பேச்சில்லாமல் செய்யும்.

இந்தப் பயணம், வளர்ச்சி, அவர் பெற்றுள்ள மரியாதை எல்லாம் மிகவும் உத்வேகம் அளிக்கிறது. இருந்தும், அவர் தற்போதும் கருணையுடன், மிகவும் எளிமையான எனக்குத் தெரிந்த அதே மனிதராகவே இருக்கிறார். அவருக்குக் கூடுதல் பலமும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

நடிகை சினேகா விஜய்யுடன் வசீகரா, கோட் என்ற இரண்டு படங்களில் நடித்துள்ளார். தற்போது, சுயமாக தொழில் செய்துவருகிறார்.

summary

Some moments leave you speechless says actres sneha after meeting Cm Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.