நடிக்க மாட்டேன்: அனிருத்
அனிருத் நடிப்பது குறித்து பேசியுள்ளார்....
இசையமைப்பாளர் அனிருத் சினிமாவில் நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத் 15 ஆண்டுகளாகத் திரைத்துறையில் இசைப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். பாடகராக, இசையமைப்பாளராக, ஒருங்கிணைப்பாளராக என இந்தியளவில் செல்வாக்குடன் இருக்கும் பிரபலங்களில் ஒருவராகவும் உள்ளவர்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் இசைக்கச்சேரிகளையும் நடத்தி வருகிறார்.
Advertisement
Advertisement
இத்தனையாண்டு கால தன் இசைப் பயணத்தில் சினிமாவில் நூற்றுக்கணக்கான ஹிட் பாடல்களைக் கொடுத்திருந்தாலும், பின்னணி இசையென வந்துவிட்டால் அனிருத்தான் என்கிற சிறப்பையும் வைத்திருக்கிறார்.
லியோ திரைப்படத்திற்குப் பின் ஜெயிலர், விடாமுயற்சி, கூலி ஆகிய படங்களின் பாடல்களும் பின்னணி இசையையும் பெரிதாகக் கவனம் பெற்றதுடன் இன்ஸ்டாகிராமில் அதிகம் ரீல்ஸ் செய்யப்பட்ட இசைகள் என்கிற சாதனையையும் படைத்தன.
இந்த நிலையில், கதாநாயகனாக நடிக்க திட்டம் உள்ளதா என அனிருத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘கண்டிப்பாக நடிக்க மாட்டேன். என் ஆர்வம் இசைதான். 15 ஆண்டுகளாக ரசிகர்கள் எனக்கு மிகப்பெரிய இடத்தைக் கொடுத்திருக்கின்றனர். இசைத்துறையில் இன்னும் சாதனைகளைச் செய்ய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.