FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தமிழில் நேரடியாக ஒளிபரப்பாகும் ஹிந்தி சீரியல்கள்!

தமிழில் ஒளிபரப்பாகும் ஹிந்தி மொழித் தொடர்கள் குறித்து...

Updated On : 9 மார்ச் 2026, 3:49 pm IST
தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ஹிந்தி மொழித் தொடர்கள் - படம் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

ஹிந்தி மொழியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சின்ன திரை தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் (டப்பிங்) செய்யப்பட்டு ஒளிபரப்பாகவுள்ளன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்தி தொடர்கள் நேரடியாக தமிழில் ஒளிபரப்பான நிலையில், தற்போது மீண்டும் ஹிந்தி தொடர்கள் தமிழுக்கு வருகின்றன.

இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலும் சின்ன திரை தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதிய களங்களில் தொடர்களை எடுக்கவும் அதை ஊக்குவிக்கும் நடவடிக்கையிலும் தொலைக்காட்சிகள் ஈடுபட்டுள்ளன.

Advertisement

Advertisement

இதனால், சமீபகாலங்களாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கும் அதில் நடிக்கும் நடிகர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக சின்ன திரை தொடர்களும் மக்களால் கொண்டாடப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி தமிழ்த் தொலைக்காட்சியிலேயே பிறமொழித் தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. சமீப காலங்களாக தமிழிலேயே ஹிந்தி தொடர்களுக்கு இணையான பிரமாண்ட தயாரிப்புகளுடன் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

காதல் ஒரு வானவில்

இந்நிலையில் மீண்டும் தமிழில் ஹிந்தி மொழித் தொடர்கள் நேரடியாக மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகவுள்ளது. அந்தவகையில், ஹிந்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற குச் ராங் பியார் கி அசே பாய் (Kuch Rang Pyar Ke Aise Bhi) பெய்ஹாத் (Beyhadh) ஆகிய இரு தொடர்கள் காதல் ஒரு வானவில், எல்லை இனி இல்லை ஆகிய பெயர்களில் தமிழில் ஒளிபரப்பாகவுள்ளன.

எல்லை இனி இல்லை

புதிதாக தொடங்கப்பட்டுள்ள சோனி விழா தொலைக்காட்சியில் இந்த இரு தொடர்களும் ஒளிபரப்பாகவுள்ளன. ஜூன் முதல் இவை ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Hindi serials to be aired in Tamil again

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments