வாழை - 2 திரைப்படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்?
வாழை - 2 குறித்து...
இயக்குநர் மாரி செல்வராஜ் வாழை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் உணர்வுப்பூர்வமாக பலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, இவர் இயக்கிய பைசன் திரைப்படம் வெற்றி பெற்றதால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பட்டியலில் இணைந்தார். இதுவரை தோல்விப்படமே கொடுக்காத இயக்குநராகவும் அறியப்படுகிறார்.
Advertisement
அடுத்ததாக, நடிகர் தனுஷை வைத்து வரலாற்றுத் திரைப்படமொன்றை எடுக்கவுள்ளார்.
இந்த நிலையில், தனுஷ் படத்திற்கு முன் வாழை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனுஷுக்காக சில இயக்குநர்கள் காத்திருப்பதால் மாரி இம்முடிவை எடுத்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.