பிக் பாஸ் 10: மகாநதி சீரியலில் இருந்து பங்கேற்கும் போட்டியாளர்கள் அதிகம்!
மகாநதி தொடரின் நான்கு பெண்களில் 2 பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது குறித்து...
மகாநதி தொடரின் நான்கு பெண்களில் 2 பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். மகாநதியில் நடித்த லஷ்மி பிரியா, சாதிகா ஆகியோர் பிக் பாஸ் சீசன் 10 போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இவர்களுக்கு சக நடிகைகளான ஸ்வேதா குமார், தாரணி ஹெப்சிபா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் உள்பட தெலுங்கு, கன்னடம், மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று (செப். 6) கோலாகலமாகத் தொடங்கியது. தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
Advertisement
Advertisement
பிக் பாஸ் என்றாலே வித்தியாசம், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதால், இம்முறை மிகுந்த வித்தியாசமாக மேடையில் இருந்தே போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
எப்போதுமே போட்டியாளர்கள் வெளியேறுவதற்கு மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், இம்முறை எந்த போட்டியாளர் உள்ளே செல்ல வேண்டும் என்பதற்கே மக்கள் வாக்களிக்கும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் மக்கள் பிரதிநிதிகளாக பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஷாமா, முனியம்மா, ஜேசன் ஆகிய 3 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
வழக்கமாக சின்ன திரை தொடர்களில் இருந்து அதிக போட்டியாளர்கள் பங்கேற்பது வழக்கம். இம்முறை லஷ்மி பிரியா, குமரன் தங்கராஜ், சாதிகா, வினோத் பாபு, முத்தழகி, அவினாஷ் ஆகியோர் மட்டுமே சின்ன திரை தொடர்களில் நடித்தவர்கள்.
இதில் நடிகை லஷ்மி பிரியா, ஷாதிகா ஆகிய இருவருமே வெற்றித் தொடரான மகாநதியில் நடித்தவர்கள். இத்தொடரில் இவர்களின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
கடந்தமுறை மகாநதியில் இருந்து திவ்யா கணேசன், கமருதீன், ஆதிரை ஆகிய மூவர் போட்டியாளர்களாக பங்கேற்றிருந்த நிலையில், இம்முறை இருவர் பங்கேற்றுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த இரு சீசன்களில் மகாநதி தொடரில் இருந்து மட்டும் 5 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
mahanadhi serial Lakshmi priya sathika in bigg boss 10
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.