'பேரன்பு’ பாடகி மது ஐயரின் ஆசை என்ன? (பாடல் விடியோ)
இளையராஜா வெளிநாடு செல்லும்போது அவருடன் கூடச் சென்று இசைக் குழுவில் பாடிவருபவர் மது ஐயர்.
இசையமைப்பாளர் இளையராஜா வெளிநாடு செல்லும்போது அவருடன் கூடச் சென்று இசைக் குழுவில் பாடி வருபவர் மது ஐயர். 'பேரன்பு' படத்தில் இவர் பாடியுள்ள 'செத்துப் போன மனசு' பாடல் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதுபோன்று 'ஒரு குப்பை கதை' படத்தில், இவர் பாடிய 'மழை பொழிந்ததும் நேரம்...' பாடலும் நல்ல ஹிட். 'தேவதேவதை' என்ற 'அமர காவியம்' படத்தின் பாடல்தான் இவரது முதல் பாடல்.
முறையாக கர்நாடக சங்கீதம் பயின்றவர். இதனால் இவருக்கு இரண்டு பெரிய பெரிய ஆசைகள். ஒன்று, மியூசிக் அகாதெமியில் கர்நாடக கச்சேரி செய்ய வேண்டும். அடுத்து, நிறைய ஆல்பங்களை வெளியிட வேண்டும் என்பது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.