அரை நூற்றாண்டுக்கும் மேலான தினமணி வாசகர்களே வருக! உங்கள் பதிவைத் தருக!!
அரை நூற்றாண்டுக்கும் மேலாக தினமணி நாளிதழின் வாசகராக இருந்தால், 'தினமணி 85' சிறப்பிதழுக்கு உங்கள் சேவை எங்களுக்குத் தேவை.
நீங்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தினமணி நாளிதழின் வாசகராக இருந்தால், 'தினமணி 85' சிறப்பிதழுக்கு உங்கள் சேவை எங்களுக்குத் தேவை.
தினமணி நாளிதழ் 85-ஆவது ஆண்டு இதழியல் பணியை நிறைவு செய்து 86வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. அதைக் கொண்டாடும் விதமாக தினமணி 85 என்கிற சிறப்பிதழ் வெளிவருகிறது.
தினமணி பத்திரிகை வெளியாகி 85 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, வெளியாகும் தினமணி 85 என்கிற சிறப்பிதழில் தமிழ் அறிஞர்களும், நிறைஞர் அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்களும் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதே சமயம், நீங்கள் தினமணியின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தினமணி வாசகராக இருந்தால் உங்களுக்கும் ஒரு அரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தினமணிக்கும், உங்களுக்குமான தொடர்பு குறித்தும், தினமணி குறித்தும் உங்களுடைய பதிவை வரவேற்கிறோம்.
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.. உங்கள் கருத்தை ஒரு பக்கத்துக்கு மிகாமல் எழுதி, புகைப்படத்துடன் உங்களைப் பற்றிய தன்விவரக் குறிப்புடன் உடனடியாக கீழ்க்காணும் முகவரிக்கு அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
இதன் மூலம் நீங்கள் அனுப்பும் பதிவு, உங்கள் புகைப்படத்துடன் தினமணி 85 சிறப்பிதழில் வெளியாகும் வாய்ப்பு கிடைக்கும் என்பதை இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
முகவரி
ஆசிரியர்,
தினமணி நாளிதழ்,
எக்ஸ்பிரஸ் கார்டன்ஸ்,
எண்.29, இரண்டாவது முதன்மைச் சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை - 600 058
மின்னஞ்சல் - dinamani85@dinamani.com
•••
மேலும் படிக்க..