கேரளத்தில் எல்டிஎஃப் ஆட்சி முடிவடைந்து ஒரு புதிய சகாப்தம் தொடங்கும்: காங்கிரஸ்
கேரளத்தில் எல்டிஎஃப் ஆட்சி முடிவடைந்து ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் என காங்கிரஸ் தெரிவித்தது குறித்து...
கேரளத்தில் எல்டிஎஃப் ஆட்சி முடிவடைந்து ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 78 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வரும் மே 4 ஆம் தேதி வாக்குகள் கணக்கிடப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் ஹரிப்பாடு தொகுதியின் வேட்பாளருமான ரமேஷ் சென்னிதலா, “ இந்த பேரவைத் தேர்தலில் நாங்கள் மாபெரும் வெற்றியை எதிர்பார்க்கிறோம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
Advertisement
Advertisement
இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எஃப்) ஆட்சி முடிவடைந்து, காங்கிரஸ் தலைமையிலான புதிய சகாப்தம் உருவாகும். எல்.டி.எஃப் -இன் ஆட்சியில் மக்கள் சோர்வடைந்து அடுத்த கட்டத்துக்கு நகர தயாராகிவிட்டனர்” எனத் தெரிவித்தார்.
இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவற்றுக்கிடையே மும்முனைப்போட்டி நிலவிவரும் சூழலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் ஹாட்ரிக் அடிப்பாரா அல்லது வேறு கட்சிகள் ஏதேனும் ஆட்சியைப் பிடிக்குமா என்பதெல்லாம் மே 4 ஆம் தேதி தெரியவரும்.
Senior Congress leader Ramesh Chennithala has stated that the LDF rule in Kerala will come to an end, and a new era will begin.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.