முகப்பு
கேரளம்

கேரளத்தில் எல்டிஎஃப் ஆட்சி முடிவடைந்து ஒரு புதிய சகாப்தம் தொடங்கும்: காங்கிரஸ்

கேரளத்தில் எல்டிஎஃப் ஆட்சி முடிவடைந்து ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் என காங்கிரஸ் தெரிவித்தது குறித்து...

Updated On : 10 ஏப்ரல், 2026 at 2:25 PM
காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா - ENS
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 1:10 PM

கேரளத்தில் எல்டிஎஃப் ஆட்சி முடிவடைந்து ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 78 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வரும் மே 4 ஆம் தேதி வாக்குகள் கணக்கிடப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 2:13 PM

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் ஹரிப்பாடு தொகுதியின் வேட்பாளருமான ரமேஷ் சென்னிதலா, “ இந்த பேரவைத் தேர்தலில் நாங்கள் மாபெரும் வெற்றியை எதிர்பார்க்கிறோம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

Advertisement

இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எஃப்) ஆட்சி முடிவடைந்து, காங்கிரஸ் தலைமையிலான புதிய சகாப்தம் உருவாகும். எல்.டி.எஃப் -இன் ஆட்சியில் மக்கள் சோர்வடைந்து அடுத்த கட்டத்துக்கு நகர தயாராகிவிட்டனர்” எனத் தெரிவித்தார்.

இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவற்றுக்கிடையே மும்முனைப்போட்டி நிலவிவரும் சூழலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் ஹாட்ரிக் அடிப்பாரா அல்லது வேறு கட்சிகள் ஏதேனும் ஆட்சியைப் பிடிக்குமா என்பதெல்லாம் மே 4 ஆம் தேதி தெரியவரும்.

summary

Senior Congress leader Ramesh Chennithala has stated that the LDF rule in Kerala will come to an end, and a new era will begin.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.