முகப்பு
தேர்தல் செய்திகள்

கேரளம்: என்டிஏ கூட்டணி 5 தொகுதிகளில் முன்னிலை!

கேரளத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஐந்து தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

பகிர்:

கேரளத்தில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஐந்து தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி கடந்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி கேரளத்தில் ஐந்து தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் 2 மணி நேரத்தில், காவி கட்சி தலைமையிலான இக்கூட்டணி நேமம், கழக்கூட்டம், மஞ்ஜேஸ்வரம், பாலக்காடு மற்றும் சத்தன்னூர் ஆகிய தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

Advertisement

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், சிபிஐ(எம்) தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருவதாகச் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.