கேரளத்தில் பணிபுரியும் தமிழர்களுக்கு நாளை விடுமுறை!
கேரளத்தில் பணிபுரியும் தமிழர்களுக்கு நாளை விடுமுறை அளித்திருப்பது பற்றி...
கேரள மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நாளை (ஏப். 23) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகின்றது.
வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நாளை ஒரு நாள் ஊதியத்துடன் பொது விடுமுறை அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அண்டை மாநிலமான கேரளத்தில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் வாக்களிக்க வசதியாக நாளை அவர்களுக்கு விடுமுறை அளிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, நேற்று மாலை முதல் தமிழ்நாடு முழுவதும் மற்றும் அண்டை மாநிலங்களின் எல்லையோரங்களில் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Holiday Tomorrow for Tamil nadu peoples who Working in Kerala!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.