தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! முழு விவரம்...
தமிழ்நாட்டில் மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம் பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 234 பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று(ஏப். 23) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ளது. இந்த தேர்தலில் சுமார் 5.73 கோடி பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
அதன்படி, தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 17.69%, 11 மணி - 37.56% பிற்பகல் 1 மணி - 56.81%, பிற்பகல் 3 மணி - 70% வாக்குகள் பதிவானது.
Advertisement
தற்போது மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 89.32 சதவிகித வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியாகுமர் மாவட்டத்தில் 73.44 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.