தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் வேலை... இளநிலைப் பட்டம் பெற்றிருந்தால் போதும்!
தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள 33 விஞ்ஞானி 'சி' மற்றும் விஞ்ஞானி 'டி' பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள 33 விஞ்ஞானி 'சி' மற்றும் விஞ்ஞானி 'டி' பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையம் (NIELIT)
மொத்த காலியிடங்கள் : 33
Advertisement
Advertisement
பணி : Scientist 'C' and Scientist 'D'
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | யப்பா... தம்பி விஐபி... அரியலூரில் நவ.28-இல் வேலைவாய்ப்பு முகாம்... உடனே போங்க
சம்பளம்: மாதம் ரூ.67,700 - ரூ.2,09,200 வழங்கப்படும்.
தகுதி : பொறியியல் அல்லது தொழில்நுட்பம் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க பணிகளில் 4 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 35 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : https://recruitment-delhi.nielit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : பொதுபிரிவினர் ரூ.800, எஸ்சி, எஸ்டி, பெண்கள் விண்ணப்பதாரர்கள் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பாரத் எலக்ட்ரானிகஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதாரர்கள் ஸ்கிரினீங் தேர்வு, தனிப்பட்ட தொடர்பு தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.12.2021
மேலும் விபரங்கள் அறிய www.nielit.gov.in அல்லது https://recruitment-delhi.nielit.gov.in/PDF/MeitY/Detailed_Advt_Scientit_C_and_D.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.