FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

ராணுவத்தில் வேலை வேண்டுமா?-  விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

இந்திய ராணுவத்தின் துணை ராணுவப்படையான அசாம் ரைபிள்ஸில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 2 ஏப்ரல் 2022, 11:52 am IST
பகிர்:

இந்திய ராணுவத்தின் துணை ராணுவப்படையான அசாம் ரைபிள்ஸில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 104

விளையாட்டு பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்: 
1. கால்பந்து (Football) - 20
2. குத்துச்சண்டை (Boxing) - 21
3. படகுபோட்டி (Rowing) - 18
4. வில்வித்தை (Archery) - 15
5. கிராஸ் கன்ட்ரி (Cross Country) - 10
6. தடகளம் (Atheletics) -10
7. போலோ (Polo) - 10 

Advertisement

Advertisement

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் சர்வதேச, தேசிய, பல்கலை, பள்ளிகள் இடையேயான போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

உயரம்: ஆண்கள் 170 செ.மீட்டரும், பெண்கள் 157 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.08.2022 தேதியின்படி யில் 18 முதல்  23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.assamrifles.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.04.2022

மேலும விவரங்கள் அறிய  www.assamrifles.gov.in/DOCS/NEWS/RALLY62.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments