FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ.56 ஆயிரம் சம்பளத்தில் மத்திய பட்டு நிறுவனத்தில் வேலை: 25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பட்டு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்-பி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 20 ஏப்ரல் 2022, 2:07 pm IST
பகிர்:


இந்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பட்டு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்-பி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அறிக்கை எண்.CSB/2/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  Scientist-B 

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 15

வயதுவரம்பு: 25.04.2022 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

தகுதி: டெக்ஸ்டைல் டெக்னீசியன் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் GATE-2022 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.csb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2022

மேலும் விவரங்கள் அறிய 
https://csb.gov.in/wp-content/uploads/2022/03/Scientist-B-Detailed-Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments