FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் 1149 பணியிடங்கள்: +2 முடித்தவர்களுக்கு வாய்ப்பு

இந்திய துணை ராணுவப்படைகளில் ஒன்றான மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எப்) கான்ஸ்டபிள்/பயர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 10 பிப்ரவரி 2022, 1:33 pm IST
பகிர்:


   
இந்திய துணை ராணுவப்படைகளில் ஒன்றான மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எப்) கான்ஸ்டபிள்/பயர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Constable/Fire

காலியிடங்கள்: 1149

Advertisement

Advertisement

மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: பிகார் 123, உத்தரபிரதேசம் 112, அசாம் 103, ஜார்க்கண்ட் 87, ஆந்திரம் 79, மஹாராஷ்டிரம் 70, ஒடிசா 58, மேற்கு வங்கம் 54, தமிழகம் 41, ஜம்மு காஷ்மீர் 41.

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

வயதுவரம்பு: 4.3.2022 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பாடங்களுடன் கூடிய பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

உயரம்: குறைந்தபட்ச உயரம் 170 செ.மீ. இருக்க வேண்டும். 
மார்பளவு: சாதாரண நிலையில் 80 செ.மீ. விரிவடைந்த நிலையில் 85 செ.மீ. இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.cisfrectt.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 04.03.2022

மேலும் விவரங்கள் அறிய www.cisfrectt.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments