டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?
தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள 79 டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள 79 டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூலை 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.Rectt./03/2022
மொத்த காலியிடங்கள்: 79
Advertisement
Advertisement
பணி: டெக்னீசியன்(1)
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. எலக்ட்ரானிக்ஸ் - 17
2. எலக்ட்ரிக்கல் - 17
3. இன்ஸ்ட்ருமென்டேசன் -11
4. கம்ப்யூட்டர் - 11
5. பிட்டர் - 05
6. சிவில் - 04
7. வெல்டிங் - 04
8. மெஷினிஸ்ட் - 03
9. மெக்கானிக் - 01
10. டூல் டை மேக்கர் - 01
11. டீசல் மெக்கானிக் - 01
12. டர்னர் - 01
13. சீட் மெட்டல் - 01
14. கிளாஸ் பிளவர் - 01
15. ஏ.சி - 01
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
கல்வித்தகுதி : குறைந்தது 55% மதிப்பெண்ணுடன் பத்தாம் வகுப்பு, தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 03.07.2022 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மற்றும் டிரேடு தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. கட்டணத்தை தில்லியில் மாற்றத்த வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் Director, National Psysical Laboratory என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக எடுத்து விண்ணப்பித்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை : www.nplindia.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி: Controller of Administration, CSIR- National Physical Laboratory, Dr. K.S. Krishnan Marg, New Delhi-110 012.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 03.07.2022
மேலும் விவரங்கள் அறிய www.nplindia.org/index.php/recruitments/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.