FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

கடற்படையில் கொட்டிக்கிடக்கும் 2500 வேலைவாய்ப்புகள்: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய கடற்படையில் காலியாக உள்ள 2500 செய்லர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 23 மார்ச் 2022, 2:58 pm IST
பகிர்:


இந்திய கடற்படையில் காலியாக உள்ள 2500 செய்லர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  

பணி: Sailors(Artificer Apprentice)
காலியிடங்கள்: 500
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
வயதுவரம்பு: 01.08.2002 க்கும் 31.07.2005க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும். 
தகுதி: கணிதம், இயற்பியல், உயிரியல் பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Advertisement

Advertisement

பணி: Sailors (SS-Recruit) 
காலியிடங்கள்: 2000
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
வயதுவரம்பு: வயதுவரம்பு: 01.08.2002 க்கும் 31.07.2005க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்தவராக இருக்க வேண்டும். 
தகுதி: கணிதம், இயற்பியல், உயிரியல் பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துத் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

உடற் தகுதிகள்: குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், 5 செ.மீட்டர் சுருங்கி விரியும் தன்மையுடன் கூடிய மார்பளவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 60. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.04.2022

மேலும் விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments