முகப்பு
வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல்துறை வங்கியில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் அஞ்சல்துறை வங்கியில் காலியாக உள்ள 47 நிர்வாகி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 28 மார்ச் 2024, 8:31 am IST
பகிர்:

இந்திய அரசுக்கு சொந்தமான நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வீட்டின் வாசலுக்கே தகவல் தொடர்புகளை கொண்டு செல்லும் இந்திய அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் அஞ்சல்துறை வங்கியில் காலியாக உள்ள 47 நிர்வாகி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். IPPB/CO/HR/RECT./2023-24/06 (15/03/2024)

பணி: Executive

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 47

சம்பளம்: மாதம் ரூ.30,000

வயதுவரம்பு: 1.3.2024 தேதியின்படி 21 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், விற்பனை, சந்தையியல் பிரிவில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வு, குழு விவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்ப்படுவர். தேவைப்படும்பட்சத்தில் ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தேர்வு தொடர்பான் அனைத்து விவரங்களும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.150. இதர பிரிவினர்களுக்கு ரூ.750. கட்டணத்தை ஆன்லைனில் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ippbonline.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 5.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments