வேலைவாய்ப்பு

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணையதளச் செய்திப் பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள செவிலியர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Staff Nurse

காலியிடங்கள்: 22

சம்பளம்: மாதம் ரூ.18,000

தகுதி: +2 தேர்ச்சியுடன் செவிலியர் பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் தமிழ்நாடு செவிலியர் வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.perambalur.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, விண்ணப்பப் படிவத்தின் வலது மூலையில் பாஸ்போட் சைஸ் புகைப்படத்தை ஒட்டி, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் செய்து நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் சுகாதார அலுவலர், பெரம்பலூர் மாவட்டம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 14.8.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Applications are invited from eligible candidates for the vacant posts of Nurses in Government Primary Health Centers and Urban Primary Health Centers in Perambalur District.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு அரசின் சிறப்புத் திட்டங்கள்: முழு விவரம்!

தி ஹன்ட்ரட்: கடைசி பந்தில் சிக்ஸர்... வைரலாகும் விடியோ!

துள்ளும் மான்... நைலா உஷா!

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அஸ்தஸ்து? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

1000 பேருக்கு வேலை: மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

SCROLL FOR NEXT