ஜிஎஸ்டி கேன்டீனில் உதவியாளர் பணி
கோயம்புத்தூரில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய வரி வரிவசூல் ஆணையர் அலுவலகத்தில் காலியாகவுள்ள உணவக உதவியாளர் பணி
கோயம்புத்தூரில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய வரி வரிவசூல் ஆணையர் அலுவலகத்தில் காலியாகவுள்ள உணவக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Canteen Attendant
காலியிடங்கள்: 3
Advertisement
Advertisement
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 18.0000 முதல் 56,900
வயதுவரம்பு: 17.3.2025 தேதியின்படி 18 -25-க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? மிஸ்பண்ணிடாதீங்க... ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.gstchennai.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, அதனுடன் சுய முகவரி எழுதப்பட்ட தபால்தலை ஒட்டப் படாத 25 x 12 செமீ அளவுள்ள தபால் கவரையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 17.3.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.