உளவுத் துறையில் இளநிலை புலனாய்வு அலுவலர் பணி 
வேலைவாய்ப்பு

உளவுத்துறையில் வேலை வேண்டுமா?: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத் துறையில் காலியாக உள்ள 394 இளநிலை புலனாய்வு அலுவலர் பணி...

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத் துறையில் காலியாக உள்ள 394 இளநிலை புலனாய்வு அலுவலர் பணிக்கு தகுதியும் ஆர்வமும் இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Intelligence Officer-II/Tech (JIO-II/Tech)

காலியிடங்கள்: 394 (SC-60, UR-157, EWS-32, OBC-117, ST-28)

சம்பளம் : மாதம் ரூ.25,500 - 81,100

வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், தகவல் தொழில்நுட்பம், கணினி பொறியியல், கம்பியூட்டர் அப்பிளிகேசன் போன்ற ஏதாவதொன்றி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல், கணிதம் பிசிஏ, பி.எஸ்சி கணினி அறிவியல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 14.9.2025 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். விதவை பெண்களுக்கு அரசின் விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு தொடர்பான விபரங்கள் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி அடிப்படையில் General பிரிவு மற்றும் Mental Ability, General Science, English Communication, Reasoning போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். கணினியில் பணிபுரியும் திறன் பரிசோதிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, இடபுள்யுஎஸ், ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் ரூ.650. இதர பிரிவினர்கள் மற்றும் பெண்கள் ரூ 500 மட்டும் செலுத்த வேண்டும். கட்டணத்தை எஸ்பிஐ வங்கி செல்லானை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

விண் ணப்பித்தவுடன் அதன் பிரிண்ட் அவுட்டை டவுன்லோடு செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14. 9.2025

Online applications are invited from Indian nationals for direct recruitment to the post of Junior Intelligence Officer Grade-II/Tech i.e., JIO-II/Tech in the Intelligence Bureau, Government of India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

ரவி மோகன் - யோகிபாபு புதிய படம்: வெளியானது முன்னோட்டக் காட்சி!

கிஷன் தாஸ் - ஹர்ஷத் கானின் ஆரோமலே: அறிமுக விடியோ அப்டேட்!

பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

SCROLL FOR NEXT