FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

மெட்ராஸ் தொழில்நுட்பக் கழக கல்லூரியில் 'ப்ராஜெக்ட் பெல்லோஷிப்' பணி

மெட்ராஸ் தொழில்நுட்பக் கழக கல்லூரியில் ப்ராஜெக்ட் பெல்லோஷிப் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்...

Updated On : 10 ஜூலை 2026, 2:44 pm IST
ப்ராஜெக்ட் பெல்லோஷிப்' பணி - கோப்புப்படம்
பகிர்:

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கழக கல்லூரியில் கீழ்வரும் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Project Fellow (CRS-Junior)

காலியிடம் : 1

Advertisement

Advertisement

சம்பளம்: மாதம் ரூ.18,200

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், உற்பத்தி, ரோபோட்டிக்ஸ் மற்றும் தானியங்கி முறை, ஆட்டோமொபைல் ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் மற்றும் எம்இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தேர்வு பற்றிய விபரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். பின்னர் அதன் நகலை பிடிஎப் வடிவில் மாற்றி mugendiran.v@ mitindia.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dr. Mugendiran V. (Principal Investigator), Assistant Professor, Department of Production Technology, Madras Institute of Technology Campus, Anna University.Chromepet, Chennai - 600 044

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.7.2026

summary

Recruitment for the Project Fellow...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments