FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஆன்மிகம்

திருவண்ணாமலை மகா தீபத் திருவிழா - புகைப்படங்கள்

உலக பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து திருக்கோவில் கருவறையின் பரணி தீபம் ஏற்ப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை திருக்கோவில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

Updated On : 6 டிசம்பர் 2022, 7:38 pm IST
அண்ணாமலையாருக்கு அரோகரோ கோஷம் எழுப்பி மகா தீபத்தை ஏற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பகிர்:
மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் நுழைவாயிலில் தீபம் ஏற்றப்பட்டது.
5 அடி உயரமும் 250 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் 3,500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு, ஆயிரம் மீட்டர் காடா துணியால் ஆன திரியின் மூலம் இந்த மகாதீபம் ஏற்றப்படும்.
விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்றப்பட்டது.

Advertisement

Advertisement

அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை திருவிழா நவம்பா் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதேநேரத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சியளிக்கும் ஸ்ரீஅா்த்தநாரீஸ்வரா் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலித்தார்.
அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மாலை 6 மணிக்கு கோயிலுக்குப் பின்னால் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
மகா தீபத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது.
மகா தீபம் காண வந்த அமைச்சர் சேகர் பாபு.
தீபம் ஏற்றப்படும் திரிக்காக 100 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட்டுள்ளது.
தீபத்தை ஏற்ற நாள்தோறும் 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.
தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரையானது செம்பினால் செய்யப்பட்டது.
அண்ணாமலையாருக்கு அரோகரோ கோஷம் எழுப்பி நிலையில், மகா தீபத்தை தரிசனம் செய்த பக்தர்கள்.
மகா தீபத்தை தரிசனம் செய்த பக்தர்கள்.
தீபத்தை காண வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் சிவனே மலையாக காட்சி தருவதாகவும், திருக்கார்த்திகை தீபத் திருநாளில் ஜோதி வடிவாக காட்சி தருவதாகவும் ஐதீகம்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் கோவில் கார்த்திகை தீப திருவிழா மற்றும் பெளர்ணமி கிரிவலம் பிரபலம்.
ஏற்றப்பட்ட மகாதீபமானது தொடர்ந்து பதினோரு நாட்கள் எரியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments