முகப்பு
ஆன்மிகம்

மலை உச்சியில் மகா தீபம் - புகைப்படங்கள்

Updated On : 13 டிசம்பர் 2024, 7:12 pm IST
திருவிழாவின் சிகர விழாவான காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சரியாக 6.00 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.
பகிர்:
மலையே மகேசன் என போற்றி வணங்கப்படும் 2,668 அடி உயரம் உள்ள திருஅண்ணாமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
தங்க கொடிமரம் முன்புள்ள அகண்டத்தில் தீபச் சுடர் ஏற்றப்பட்டதும், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
உமையவளுக்கு தனது இடபாகத்தை அளித்து, 'அர்த்தநாரீஸ்வரர்' ஆக அண்ணாமலையார் எழுந்தருளினார்.

Advertisement

Advertisement

மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டபோது, 'சிவ சிவ' கோஷம் முழங்க பக்தர்கள் கைகூப்பி சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் பக்தி முழக்கமிட்டு, மகா தீபத்தை தரிசித்த பக்தர்கள்.
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 4-ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 4-ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தனித்தனித் தேர்களில் பவனி வந்தனர்.
அண்ணாமலையாருக்கு 'அரோகரா' என முழக்கமிட்டு வழிப்பாடு செய்த பக்தர்கள்.
தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.
அண்ணாமலையாருக்கு 'அரோகரா' என முழக்கமிட்டு வழிப்பாடு செய்த பக்தர்கள்.
கோயில், வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதித்த 6.5 அடி உயர கொப்பரையில் எரிகின்ற மகா தீபத்தை தீபத்தை காண பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
மகா தீப தரிசனத்தை தொடர்ந்து 11 நாட்களுக்கு காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.