நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் ஸ்ரீ ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயில் மகாகும்பாபிஷேக விழா அதிவிமரிசையாக நடைபெற்றது. 
ஆன்மிகம்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் மகாகும்பாபிஷேகம் - புகைப்படங்கள்

DIN
சரியாக காலை 6.01 மணிக்கு கலங்காமற் காத்த கணபதி, ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலி விமானங்கள், ராஜகோபுரங்கள், ஏனைய விமானங்கள் மகாகும்பாபிஷேகம், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலி, குரு தட்சிணாமூர்த்தி விமானம் மற்றும் மூலாலய மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் வருடம் தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இக்கோவிலில் குருபெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
மகாகும்பாபிஷேகம் நடைபெற்று பனிரெண்டு ஆண்டுகள் நிறைவுடைந்ததையொட்டி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முன் வந்தது.
மகாகும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் தொடங்கியது.
கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 7 ம் தேதி தொடங்கியது. 6 வது கால யாகசாலை பூஜைகள் நேற்று அதிகாலை நடந்தது. அதனைத்தொடர்ந்து திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது.
ஸ்ரீ ஆலங்குடி குருபகவான் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணியை தொடர்சியாக கண்காணித்து, அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அவ்வப்போது தக்க அறிவிரைகள் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்.
நவக்கிரகஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் நடைபெற்ற மகாகும்பாபிஷேகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

ரஷிய முன்னாள் அதிபரின் போா் மிரட்டல் எதிரொலி - அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு

SCROLL FOR NEXT