முகப்பு
சினிமா

பிரமோஷனல் டூரில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் - புகைப்படங்கள்

மணிரத்னம் இயக்கத்தின் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா ஆகியோர் திருவனந்தபுரம் சென்றுள்ளனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
படத்தில் நடித்துள்ள விக்ரம் தனது ட்விட்டர் அக்கவுண்டை 'ஆதித்த கரிகாலன்' எனவும் த்ரிஷா 'குந்தவை' எனவும், 'அருண்மொழி வர்மன்' என ரவியும், 'வந்தியதேவன்' என கார்த்தியும் தங்கள் பெயர்களை மாற்றியுள்ளனர்.
பகிர்:
விமானத்தில் செல்லும் புகைப்படங்களை வெளியீட்ட 'பொன்னியின் செல்வன்' படக்குழுவினர்.
பிரமோஷன் படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா.
மணிரத்னம் இயக்கியுள்ள இந்த பிரம்மாண்ட படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
கேரளா சென்றுள்ள பொன்னியின் செல்வன் படக்குழுவினர்.
படத்தின் டிரெய்லர், பாடல்கள், போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்துள்ளது.
படக்குழுவினர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
படக்குழுவினர் செப்டம்பர் 22-ஆம் தேதி பெங்களூருக்கும், செப்டம்பர் 23-ஆம் தேதி ஐதராபாத்திலும், 24-ந் தேதி மும்பையிலும், இறுதியாக 26-ஆம் தேதி தில்லியில் தங்களுடைய சுற்றுப்பயணத்தை முடிக்க உள்ளனர்.
முழு கட்டுரையைப் படிக்க →