இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். இவர்களுடன் பிரசன்னா, ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'.
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 11:13 PM
சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாகவும் நாயகியாக ஆத்மிகா நடித்துள்ளார்.படத்தில் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Advertisement
வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.கிரைம் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் உதயநிதியுடன் பிரசன்னா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா நடித்துள்ள 'கண்ணை நம்பாதே' திரைப்படம் மார்ச் 17ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.'கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் போஸ்டர்.