நிரம்பி வழியும் மேட்டூர் அணை
தென்மேற்கு பருவ மழை காரணமாக, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி நிரம்பியது. இதனிடையே கர்நாடகா மாநிலங்களில் மீண்டும் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து, கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி ஆகிய 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.
Advertisement
Advertisement