இந்திய விமானப்படை 86வது ஆண்டு தினம்
1932ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய விமானப்படை தனது 86வது ஆண்டை கொண்டாடுகிறது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத்தளத்தில் சாகச நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியின் மூவர்ணங்களைக் கொண்ட பாராசூட்டுகளில் பறந்தபடி வீரர்கள் வானில் சாகசம் செய்தனர். கண்காட்சியில் விமானப்படையை சோ்ந்த ஜாக்குவாா், மிக்-29, மிராஜ்-2000, எஸ்யூ 30, எம்கேஐ பைட்டா் ஜெட் மற்றும் ருத்ரா ஹெலிகாப்டா்களும் இடம் பெற்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.