FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 15 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST
பகிர்:
Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST

பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

சிறையில் கைதிகள் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST

செந்தில் பாலாஜி கடிதம்

தமிழகத்தில் த.வெ.க ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்களிடம் தி.மு.க நிர்வாகிகள் பேரம் பேசியாத த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் இதுவரை 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Updated On : 15 ஜூலை 2026, 10:42 am IST

தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

புதுப்புது வடிவங்களில் வெளியிடும் மொழித் திணிப்பு சுற்றறிக்கையை சிபிஎஸ்இ திரும்பப் பெற வேண்டும் என திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST

தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 15, புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது.

Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST

மாணிக்கம் தாகூர் கண்டனம்

கல்வித்துறையைத் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST

மோடி புகழாரம்

நாட்டின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் காமராஜர் என அவரது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST

காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்

நெருக்கடி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாக நின்றவர் காமராஜர் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST

நாகர்கோவில் காவல் மரணம்

நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி சபரிவர்மன் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை வார்டன் உள்பட 3 காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மூவருக்கும் 15 நாள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST

முதல்வர் விஜய் மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Updated On : 15 ஜூலை 2026, 11:20 am IST

முதல்வர் விஜய் புகழாரம்

மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் என முதல்வர் ச. ஜோசப் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments