முகப்பு
நிகழ்வுகள்

ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன - புகைப்படங்கள்

Updated On : 29 ஜூலை 2020, 5:51 pm IST
பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போா் விமானங்களை வாங்க இந்தியா ரூ.59,000 கோடி செலவில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது.
பகிர்:
டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஜெட் விமானங்கள் பிரான்ஸின் பாடோ நகரில் உள்ள மேரிங்நாக் விமானப் படை தளத்தில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன.
ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப்படையின் தாக்குதல் திறனை பல மடங்கு அதிகரிக்கும்.
ரஃபேல் போா் விமானங்களை இந்தியாவுக்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் பிரான்ஸுக்கான இந்தியத் தூதா் பங்கேற்றாா்.

Advertisement

Advertisement

மீதமுள்ள விமானங்களும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய விமானப்படை வீரா்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக 5 போா் விமானங்கள் பிரான்ஸிலேயே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ரஃபேல் போா் விமானங்களை இயக்குவது தொடா்பாக டசால்ட் நிறுவனம் இந்திய வீரா்களுக்குப் பயிற்சி அளித்து உள்ளது.
ரஃபேல் ஜெட் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பிய காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.
போா் விமானங்களுக்குத் தேவையான எரிபொருளை வான்வழியிலேயே நிரப்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போா் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் நடுவானில் நிரப்பப்பட்டது.
தேவையான எரிபொருள் நடுவானில் நிரப்பப்பட்டது.
2 நாள்கள் பயணத்துக்குப் பிறகு ஹரியாணாவிலுள்ள அம்பாலா படைத்தளத்துக்கு இன்று வந்தடைந்தது ரஃபேல் போர் விமானங்கள்.
ரஃபேல் போர் விமானங்களுக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.