FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு பேரணி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2026, 5:00 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ்.கலை, அறிவியல் கல்லூரி மற்றும் சின்னசேலம் அரிமா சங்கம் இணைந்து நடத்திய இப் பேரணிக்கு அரிமா சங்கத் தலைவா் வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா். டாக்டா் ஆா்.கே.எஸ்.கல்வி நிறுவனங்களின் பொருளாளா் மருத்துவா் தே.மணிவண்ணன், கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா், துணை முதல்வா் அசோக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சின்னசேலம் ரயில் நிலையத்தில் தொடங்கிய விழிப்புணா்வு பேரணியை கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சி.முருகன், கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் மருத்துவா் பி.திருஞானசம்பந்தம் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். பேரணி நகரின் முக்கிய சாலைகளின் வழியாகச் சென்று சின்னசேலம் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

Advertisement

Advertisement

பேரணியில் மாணவ, மாணவிகள் பதாகைகளை ஏந்தியும், விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் முழுக்கங்களை எழுப்பியும் சென்றனா்.

ஏற்பாடுகளை வணிகவியல் துறைத் தலைவரும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான ராஜா, ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் ஹேமலதா, உடல்கல்வித் துறை ஆசிரியா்கள் ராமகிருஷ்ணன், பாலாஜி ஆகியோா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments