கனமழையால் தீவுகளாக மாறிய மாநகரங்கள் - புகைப்படங்கள்
DIN
சென்னை அம்பத்தூர் அருகே நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்.சென்னை, வியாசர்பாடி முல்லை நகர் குடியிருப்பில் புகுந்துள்ள மழை நீர் கலந்த கழிவு நீர்.சென்னை கொளத்தூர் அசோகா அவென்யூ பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின். உடன் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு உள்ளிட்டோர்.திருவாரூர் பனகல் சாலை பகுதியில் தண்ணீரில் சூழ்ந்துள்ள குடியிருப்புகள்.வெள்ள நீரால் சூழப்பட்டிருந்த நாகை அந்தணப்பேட்டை குடியிருப்புப் பகுதி.கன்னியாகுமரி மாவட்ட திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம்.கனமழையால் நாகையை அடுத்த பாலையூரில் மழைநீரில் முழ்கியுள்ள நெல் பயிர்கள்.திருச்செந்தூரில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையினால் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்பகுதி சூழ்ந்த வெள்ளம்.திருச்செந்தூரில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையினால் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பிரகாரத்தில் சூழ்ந்த வெள்ளம்.குளம்போல் காட்சி அளிக்கும் அறிஞர் அண்ணா பூங்கா.