முகப்பு
விளையாட்டு

கால்சனை தெறிக்கவிட்ட பிரக்ஞானந்தா - புகைப்படங்கள்

செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா - மேக்னஸ் கார்ல்சன் இடையிலான இரண்டாவது சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா - மேக்னஸ் கார்ல்சன் இடையிலான இரண்டாவது சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
பகிர்:
செஸ் உலகக்கோப்பைத் தொடர் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்றுது.
உலகின் முதல் நிலை சதுரங்க ஆட்டக்காரராக திகழும் நார்வே நாட்டை சேர்ந்த கார்ல்சனுடன் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா விளையாடினார்.
ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் கார்ல்சன். அவரை எதிர்த்து வெற்றி பெற்று உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் முனைப்புடன் பிரக்ஞானந்தா விளையாடி வருகிறார்.
ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா கறுப்பு நிற காய்களுடனும், மேக்னஸ் கார்ல்சன் வெள்ளை நிற காய்களுடனும் ஆட்டத்தை தொடங்கினர்.
ஆட்டம் தொடங்கிய சில நகர்வுகளிலேயே பிரக்ஞானந்தா - மேக்னஸ் கார்ல்சன் இருவரும் தங்களின் குதிரைகளை இழந்தனர்.
வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மேக்னஸ் கார்ல்சன் அடுத்தடுத்து அதிரடியான நகர்வுகளை மேற்கொள்ள இருவருமே தங்களின் ராணிகளையும் இழந்தனர்.
பிஷப் மற்றும் யானை ஆகிய முக்கிய காய்களுடன் ஆட்டம் தொடர்ந்தது.
அடுத்தடுத்து 5 நகர்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பின்னர் இருவரும் தங்களின் யானைகளை இழந்தனர்.
மேக்னஸ் கார்ல்சனின் ஒவ்வொரு நகர்வும் டிராவுக்கானதாக இருந்த நிலையில், ஆட்டம் டிராவில் முடிவடையும் என்று கணிப்பு.
30 நகர்வுகளுக்கு பின் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.