முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

24.5.1976: இந்தியா - பாக். வர்த்தகத்தில் தனியார் துறையும் ஈடுபடலாம்

இந்தியா - பாக். வர்த்தகத்தில் தனியார் துறையும் ஈடுபடலாம்...

Updated On : 24 மே 2026, 4:06 am IST
24.5.1976 - Dinamani
பகிர்:

புதுடில்லி. மே. 33 - இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில், வர்த்தகம் இரண்டு முடிவுகள் விளைவாக மேலோங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்குமிடையிலான வாணிபத்தில் தனியார் துறையும் பங்கு பற்றும் என்பதும், கூட்டுக் கமிட்டி அமைப்பதென்பதும் புது முடிவுகள் ஆகும்.

ஒரு வாரத்துக்கு முன் இந்திய தூது கோஷ்டி வந்துவிட்டுப் போனதையடுத்து வெளியான கூட்டறிக்கையில் இரு நடவடிக்கைகளுக்கும் வகை செய்யப்பட்டுள்ளது.

தனியார்துறை ஜூலை மாதம் 15 ஆம் தேதி முதல் வாணிபத்தில் ஈடுபடலாம். ஆகையால், கூட்டுக்கமிட்டி உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

கூட்டுக் கமிட்டி 1975 ஆம் ஆண்டு வர்த்தக ஒப்பந்தம் இயங்கிய முறையைப் பரிசீலிக்கும். அதனையடுத்து, கூடுமான விரைவில் அதன் முதல் கூட்டம் நடத்தப்பட வேண்டும். எப்படியும் இந்த ஆண்டு முடிவதற்கு முன்னமே கூட வேண்டும்.

ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டுக்கு மேல் ஆனபோதிலும் அசல் பேரம் திருப்திகரமாக அமையவில்லை. ...

கடத்தப்பட்ட விமானம் வெடித்து 10 பணய கைதிகள் பலி

ஜம்போங்கா (பிலிப்பைன்ஸ்), மே. 23 - கடத்திச் செல்லப்பட்ட பிலிப்பைன்ஸ் விமானம் இன்று வெடித்ததில், குறைந்த பட்சம் 10 பணயக் கைதிகள் மாண்டனர்; 22 பேர் காயமுற்றனர். துருப்புகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 கடத்தல் பேர்வழிகள் மாண்டனர்.

துருப்புகள் கண்ணீர் புகைகுண்டுகளைக் கொண்டு விமானத்தைத் தாக்க முயன்றபோது, கடத்தல்காரர்களில் ஒருவர் ஒரு வெடிகுண்டை, விமான பைலட் இருக்கும் பகுதியில் வெடித்ததாக ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர். முஸ்லீம் கடத்தல்காரர் 3 பேர் பிடிபட்டனர்.

விமானப் பயணிகளும், 6 சிப்பந்திகளும் பாதுகாப்பைத் தேடி ஓடினர்.

சென்ற வெள்ளியன்று 6 முஸ்லிம்கள் இந்த விமானத்தைக் கைப்பற்றியது நினைவிருக்கலாம்.

பயணிகளில் பலர் காயமடைந் திருப்பதாகவும், அவர்கள் எண்ணிக்கை தெரியவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். ஆனால் குறைந்தபட்சம் 54 பணயக்கைதிகள் பத்திரமாயிருப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள்.

லிபியாவுக்குப் பறந்துசெல்ல ஒரு விமானமும், 3,75,000 யு.எஸ். டாலர் பணமும் தருமாறு இந்தக் கடத்தல்காரர்கள் கேட்டிருந்தார்கள்.

இந்தக் கோரிக்கைகள் பற்றி நடந்த பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதும், இந்த விமானத்தைத் தாக்குவதென்று முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். ...

summary

Private Sector May Also Participate in India-Pakistan Trade

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.