முகப்பு
செய்திகள்

பனிக்காலத்தில் தொண்டைக்கட்டு, இருமல் வராமல் தடுக்க சில வழிகள்!

மாலை நேரங்களில், உங்களுக்குப் பிடித்தமான, சூப் சூடாக அருந்தலாம்.

Updated On : 2 டிசம்பர் 2018, 11:50 am IST
பகிர்:
  • மாலை நேரங்களில், உங்களுக்குப் பிடித்தமான, சூப் சூடாக அருந்தலாம். வெது வெதுப்பான நீரில், இஞ்சி சாறும், தேனும் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். இது தொண்டைக்கட்டு, இருமல் வராமல் தடுக்கும்.
  • பனிக்காலங்களில், எல்லாமே சூடாக எடுத்துக் கொள்வது நல்லது.
  • சித்தரத்தை, அதிமதுரம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிடலாம்.
  • எண்ணெய்ப் பதார்த்தங்களை தவிர்த்து, எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
  • வேப்பம்பூவை உணவில், அடிக்கடி சேர்த்துக் கொண்டால் வாயு தொந்தரவுகள், பித்தம், பசியின்மை இவற்றிலிருந்து தப்பிக்கலாம்.
  • மசாலா பொருட்களை தவிர்ப்பது நல்லது.
  • கண்டிப்பாக, உடற்பயிற்சி செய்ய வேண்டும். நல்ல தூக்கம் கிடைக்கும்.
  • நெஞ்சில் கபம், ஜலதோஷம் பிடித்துக் கொள்ளாமல் இருக்க தலையையும் உடலையும் மூடிக் கொண்டு வெளியில் செல்வது நல்லது.
  • பனிக்காலத்தில் கிருமிகள் அதிகமாக உற்பத்தியாவதால் அவற்றிலிருந்து காத்துக் கொள்ள சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

- கிரிஜா ராகவன் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments