தீராத நோய்களை எல்லாம் குணமாக்கும் அற்புதமான சூப் இதுதான்!
பசலைக் கீரையை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
கீரை : பசலைக்கீரை சூப்
தேவையான பொருட்கள்
பசலைக் கீரை - ஒரு கட்டு
உளுந்து (வறுத்தது) - 1 ஸ்பூன்
தக்காளி - 2
வெங்காயம் - ஒன்று
பூண்டு.- 10 பல்
இஞ்சி - ஒரு துண்டு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
மிளகு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
உப்பு, மஞ்சள், எண்ணெய் - தேவையான அளவு
Advertisement
Advertisement
செய்முறை : பசலைக் கீரையை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய தக்காளி , வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அடுத்து பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, மிளகு, சீரகம் , மஞ்சள், உளுந்து ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.
கடைசியாக கீரையையும் அதனுடன் சேர்த்து வதக்கி ஆறு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பாதியாக சுண்டச் செய்து அதனுடன் தேவையான உப்பு சேர்த்து இறக்கி வைத்து குடிக்கவும்.
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.