தாம்பத்தியத்தில் எல்லையில்லா இன்பம் கிடைக்க இது உதவும்!
முதலில் கீரைகளைத் தனித்தனியே அரைத்துக் கொள்ளவும். பின்பு மீதமுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கலவைக் கீரை சத்துமாவு
தேவையான பொருட்கள்
முருங்கைக் கீரை (காய்ந்தது) - 100 கிராம்
தூதுவளைக் கீரை (காய்ந்தது) - 100 கிராம்
பசலைக் கீரை (காய்ந்தது) - 100 கிராம்
அரைக் கீரை (காய்ந்தது) - 100 கிராம்
உளுந்து - 100 கிராம்
சிறுபருப்பு - 100 கிராம்
கொண்டைக் கடலை - 100 கிராம்
பச்சரிசி - 1 கிலோ
ஏலக்காய் - 5 கிராம்
மிளகு - 10 கிராம்
Advertisement
Advertisement
செய்முறை : முதலில் கீரைகளைத் தனித்தனியே அரைத்துக் கொள்ளவும். பின்பு மீதமுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு இரண்டு பொடிகளையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
பலன்கள் : தினமும் இரண்டு ஸ்பூன் அளவு மாவை எடுத்து தண்ணீரில் கரைத்து நன்கு கொதிக்க வைக்கவும். அதனுடன் சின்ன வெங்காயத்தை வதக்கி கஞ்சியில் சேர்த்து தினமும் அதிகாலை வேளை அல்லது மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் தாம்பத்தியத்தில் எல்லையில்லா இன்பத்தை கொடுக்கும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.