உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை திப்பிலி 

திப்பிலி (10) ,சீரகம் (1ஸ்பூன்),  மிளகு (20) ஆகியவற்றுடன் நொய் அரிசி (கால் கிலோ),

DIN

திப்பிலி (10) ,சீரகம் (1ஸ்பூன்),  மிளகு (20) ஆகியவற்றுடன் நொய் அரிசி (கால் கிலோ), சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்துவந்தால் சளி, இருமல், ஆஸ்துமா, கோழைக்கட்டு போன்றவை தீரும்.

திப்பிலி, அக்கரகாரம், அதிமதுரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து , தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைச்சதை விரைவில் கரையும்.

திப்பிலி (10), கிராம்பு (5), மிளகு (5), மஞ்சள் தூள் (அரை ஸ்பூன்) ஆகியவற்றை தண்ணீரில் (3 டம்ளர் ) போட்டுக் கொதிக்கவைத்து வாய் கொப்பளித்து வந்தால் காது, மூக்கு, தொண்டைசார்ந்த நோய்கள் குணமாகும்.

திப்பிலியை வல்லாரைச் சாற்றில் ஊறவைத்து  காயவைத்துப் பொடிசெய்து , தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.

திப்பிலியை எலுமிச்சைச் சாற்றில் ஊறவைத்து காயவைத்துப் பொடிசெய்து , தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல், ஏப்பம் போன்றவை குணமாகும்

திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து காலை மாலை என இருவேளையும் 1 மாதம் சாப்பிட்டு வந்தால் தேமல் குணமாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!

அமெரிக்கா செல்கிறார் கொலம்பியா அதிபர்! டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்தாரா?

கோவை: அரசு மாணவிகள் விடுதி அருகே திறக்கப்படும் டாஸ்மாக் பார்!

மன அழுத்தமா? மரபணுவும் ஒரு காரணம்! மன நலனுக்கு என்ன செய்வது?

பெர்லின் திரைப்பட விழாவுக்குத் தேர்வான அறிமுக இயக்குநரின் தமிழ்ப் படம்!

SCROLL FOR NEXT