முகப்பு
உணவே மருந்து

காது கேட்கும் திறன் சரியாக இருந்தாலும் மூளை தாமதமாக புரிந்து கொள்ளுதல் 

நம் உடலில் உள்ள அதிகமான புளிப்புத்தன்மையினால்  மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகள்

Updated On : 31 ஜூலை 2018, 4:02 pm IST
பகிர்:

அறிகுறிகள் : நம் உடலில் உள்ள அதிகமான புளிப்புத் தன்மையினால்  மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகள் குறைந்து விடும் .அதனால் நாம்  பேசும் சப்தத்தை காது வழியாக கேட்பார்கள்.காது கேட்கும்திறன் சரியாக இருந்தாலும்  மூளை தாமதமாக புரிந்து கொள்ளும். இந்த  குறைபாடு நீங்க.

மண்டலம் - ஜீரண மண்டலம்
காய் - வெண் பூசணிக்காய்
பஞ்சபூதம் - நிலம்
மாதம் - சித்திரை
குணம் - தைரியம்
ராசி / லக்கினம் - மேஷம்

சத்துக்கள் : வைட்டமின் B, C, கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து

Advertisement

Advertisement

தீர்வு : வெண் பூசணிக்காய் தோல் மற்றும் விதையுடன் (100 கிராம்), கோவக்காய் (5), வெற்றிலை (5), புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை மூன்றையும் சிறிதளவு எடுத்து அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாகவோ அல்லது நீராவியில் வேக வைத்து பொறியலாகவோ உணவிற்குப் பதிலாக காலை மாலை என இரு வேளையும்  சாப்பிட்டு வரவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளலாம். (பின்பு பசித்தால் வழக்கமான உணவு உட்கொள்ளலாம்)

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.