FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உணவே மருந்து

மாறுகண், நிறங்களை அறியாத கண்கள், கருவிழி ஆட்டம், கண் இமை தொங்கல் அனைத்தும் குணமாக 

நரம்பு மண்டலம் மற்றும் வாயு மண்டலத்தின் சீரற்ற தன்மையினால் கண்களில்

Updated On : 31 ஜூலை 2018, 3:23 pm IST
பகிர்:

அறிகுறிகள் : நரம்பு மண்டலம் மற்றும் வாயு மண்டலத்தின் சீரற்ற தன்மையினால் கண்களில் உள்ள தசைகளின் சுருங்கி விரியும் செயல்பாட்டில் முரண்படும் போது  உண்டாகும் மாறுகண், நிறங்களை அறியாத கண்கள், கருவிழி ஆட்டம் கண் இமை தொங்கல் அனைத்தும் குணமாக 

மண்டலம் - தசை மண்டலம்
காய் - அரசாணிக்காய், பரங்கிக்காய், மஞ்சள் பூசணிக்காய்
பஞ்சபூதம் - நெருப்பு
மாதம் - ஆவணி
குணம் - அன்பு 

ராசி / லக்கினம் - சிம்மம்

Advertisement

Advertisement

சத்துக்கள் : வைட்டமின் பி1, பி2, பி6, டி, சி மற்றும் பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச் சத்துக்களான பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

தீர்வு : அரசாணிக்காய் தோலுடன் துருவி (100 கிராம்), கொத்தவரங்காய் (5) இவை இரண்டையும்  எடுத்து மிக்ஸியில் போட்டு  அதனுடன் தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்து  காலை வேளையில் வெறும் வயிற்றில்  குடிக்கவும்.

அரசாணிக்காய் தோலுடன் துருவி (100 கிராம்) , வாழைக்காய் (அரை காய்) இரண்டையும்  நறுக்கி மிக்ஸியில் போட்டு  தண்ணீர் ஊற்றி ஜூஸாக்கி மாலை வேளையில் வெறும் வயிற்றில்  குடிக்கவும்.

முருங்கை விதையிலிருந்து எடுக்கப்பட்ட முருங்கை எண்ணெய்யை தினமும் இரவு படுக்கப்போகும் முன் இரண்டு கண்களிலும் தலா ஒரு சொட்டு வீதம் போட்டு வந்தால்  கண்களில் உண்டாகும் மாறுகண், நிறங்களை அறியாத கண்கள், கருவிழி ஆட்டம், கண் இமை தொங்கல் அனைத்தும் குணமாகும்.

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments