நியூயார்க் மகாவல்லப கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தித் திருவிழா
நியூயார்க் நகரில் பிளஷிங் ரகுதியில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள அருள்மிகு மகாவல்லப கணபதி திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா, 9 நாள் திருவிழாவாக ஆகஸ்டு 26ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை மிகவ
9 நாட்களிலும் தினசரி விபூதி, சந்தனம், குங்குமம், பூக்கள், தங்க ஆபரணங்கள், உணவுப் பொருட்கள் என விதவிதமான சிறப்பு அலங்காரங்களில் மூலவர் மகா வல்லப கணபதி மிக அற்புதமாகக் காட்சியளித்தார். சதுர்லட்ச மூல மந்திர ஜபம் (நான்கு லட்சம் முறை மூல மந்திரத்தை ஜபித்தல்), யாகசாலை பூஜை மற்றும் உற்சவ மூர்த்தியுடன் நாதசுர இசை முழங்க பிரகார ஊர்வலம், மகா ஆராதனை என தினசரி நிகழ்வுகள் ஒன்பது நாட்களிலும் மிக விமரிசையாக நடைபெற்றது.
விழாவின் கடைசி நாளான செப்டம்பர் 4ந் தேதி ஞாயிற்றுகிழமை மதியம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட ரத யாத்திரை மிகச்சிறப்பாக இருந்தது. சுமார் 3 மணி நேரம் நியூயார்க் நகர வீதிகளில் வலம் வந்த ரத யாத்திரையில் சிறுவர்கள், சிறுமியர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நடனமாட, பெரியோர்கள் பலர் விநாயகர் பக்திப் பாடல்கள் பாடிவர, ரதயாத்திரை நடைபெற்ற பகுதி முழுவதும் திருவாழாக்கோலம் கொண்டிருந்தது.
கோவிலுக்கு வந்தவர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது. கனடாவிலிருந்து வந்திருந்த சிவகுருநாதன் குழுவினரின் நாதஸ்வர தவிலிசை 9 நாள் கோவில் வைபவங்களுக்கும், ரத யாத்திரைக்கும் மேலும் பெருமை சேர்த்தது.
Advertisement
Advertisement
இந்த விழா மிகச்சிறப்பாக அமைய கோவில் நிராவ்கத் தலைவர் டாக்டர் உமா மைசூரேக்கர் தலைமையில் அனைத்து சிவாச்சார்யார்களும், கோவில் பணியாளர்களும், சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களும் இரவு பகல் பாராது முழு அர்ப்பணிப்புடனும், பேரார்வத்துடனும் செயலாற்றியது மிகவும் பாராட்டத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.