முகப்பு
இந்தியா

குஜராத்தில் மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்: 3 வேட்பாளர்களின் வெற்றி உறுதி: பாஜக

குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கும் 3 பேரும் குறிப்பிடத்தக்க வாக்குகள் வித்தியாசத்தில்

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 3 இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கும் 3 பேரும் குறிப்பிடத்தக்க வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்று அக்கட்சியின் மாநில மேலிடப் பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆமதாபாதில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக வேட்பாளர்களுக்கு, வெற்றிக்கு தேவையான வாக்குகளைக் காட்டிலும் கூடுதலாக 3 வாக்குகள் கிடைக்கும். இதனால், பாஜக வேட்பாளர்கள் நல்ல வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவர். எங்களது கணக்கு எப்போதும் தவறாது.
கருத்து வெளியிடும் உரிமை தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் காங்கிரஸ் தகர்த்து விட்டது. குஜராத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, தொகுதியில் இருக்காமல், பெங்களூருக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் அக்கட்சியால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பெங்களூரில் இருந்து குஜராத்துக்கு அவர்கள் மீண்டும் திரும்பி வந்தபோதும், தொகுதி பக்கமோ, தங்களது குடும்பத்தினருடன் ராக்கி பண்டிகையை கொண்டாடவோ, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனுமதிக்கப்படவில்லை. சிறைக் கைதிகள் போல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் பூபேந்திர யாதவ்.

முழு கட்டுரையைப் படிக்க →