முகப்பு
இந்தியா

பிரதமரின் 'மனதின் குரல்' உரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி! 

ஒவ்வொரு மாதமும் வானொலி வழியாக பிரதமர் மோடி உரை நிகழ்த்தும் 'மனதின் குரல்' (மான் கி பாத்) நிகழ்ச்சியை நாளை ஒளிபரப்ப இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி 2017, 3:11 pm IST
பகிர்:

புதுதில்லி: ஒவ்வொரு மாதமும் வானொலி வழியாக பிரதமர் மோடி உரை நிகழ்த்தும் 'மனதின் குரல்' (மான் கி பாத்) நிகழ்ச்சியை நாளை ஒளிபரப்ப இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்களுக்கு வானொலி வழியாக பிரதமர் மோடி உரை நிகழ்த்தும் 'மனதின் குரல்' (மான் கி பாத்) நடைபெறுவது வழக்கம். தற்போது பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி துவங்கி, மார்ச்8-ஆம் தேதி வரை நடைபெறுவதாலும் , தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், அவரது உரைக்கு அனுமதி கிடைக்குமா என்ற சூழல் நிலவியது.

இந்நிலையில் அவரது உரைக்கு அனுமதி கேட்டு மத்திய அரசானது இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகிய பொழுது, அனுமதி அளித்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இந்த முறை பிரதமர் மோடியின் உரையானது பள்ளியிறுதி தேர்வை எதிர் கொள்ள இருக்கின்ற மாணவர்கள் குறித்து அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.