முகப்பு
இந்தியா

எல்லையில் ஊடுருவல் முயற்சி: பஞ்சாப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பெண்! 

பஞ்சாப் சர்வதேச எல்லைப் பகுதியில்க ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பெண்ணை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

Updated On : 15 மே 2017, 2:07 pm IST
பகிர்:

சண்டிகர்: பஞ்சாப் சர்வதேச எல்லைப் பகுதியில்க ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பெண்ணை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ் பூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் உடனான சர்வதேச எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இன்று அதிகாலை 3 மணி அளவில் பாகிஸ்தான் பகுதியில்  இருந்து,  இளம்பெண் ஒருவர் இந்திய எல்லை பகுதிக்குள் ஊடுருவினார். எல்லையில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலிகளை கடந்து அவர் இந்தியாவை நோக்கி வந்தார்.

இதனைக் கண்டதும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த இளம்பெண்ணை திரும்பி செல்லும்படி எச்சரித்தனர். ஆனால் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களின் எச்சரிக்கையை புறக்கணித்த அந்த பெண் தொடர்ந்து முன்னேறி வந்தார்.

Advertisement

Advertisement

இதனால் சந்தேகம் அடைந்த எல்லைப்பாதுகாப்பு படைவீரர்கள் அந்த பெண்ணை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அந்த பெண் ஊடுருவிய நோக்கம் முறித்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments