FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பயிர்க்கடன் தள்ளுபடிக்கு விரைவில் உத்தரவு: கர்நாடக முதல்வர் குமாரசாமி

பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

Updated On : 7 ஆகஸ்ட் 2018, 1:11 am IST
பகிர்:


பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரு, விதான செளதாவில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் நிலுவை கடன்தொகையைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இதற்காக விவசாயிகள் யாரும் குழப்பமடைய வேண்டாம். 
பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான உத்தரவு அடுத்த சில நாள்களில் வெளியிடப்படும். விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வதாக நிதிநிலை அறிக்கையிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால் வங்கிகள் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விவசாயிகளின் நலன் காப்பதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது.
பயிர்க்கடன் தொடர்பாக, அரசு வழிகாட்டுதல்களை வடிவமைத்து வருகிறது. விவசாயிகளுக்கு சாதகமாகும் வகையில் பயிர்க்கடன் தள்ளுபடிதிட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. பழைய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாததால், புதிய பயிர்க்கடன் கொடுக்கப்படவில்லை என்ற புகார்கள் வந்துள்ளன. 
பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டால், இந்தப் பிரச்னை முழுமையாகத் தீர்க்கப்படும் என்றார் குமாரசாமி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments