முகப்பு
இந்தியா

இமயமலையில் 8.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

இமயமலையில் 8.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 2 டிசம்பர் 2018, 6:39 pm IST
பகிர்:


பெங்களூரு: இமயமலையில் 8.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள ஜவகர்லால் நேரு விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் சி.பி. ராஜேந்திரன், அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த கே.எம்.ஸ்ரீஜித் மற்றும் தில்லியின் தேசிய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த வினீத் கஹலாட் ஆகியோர் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வில், இமயமலை பகுதியில் 8.5 என்ற ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் பேராபத்து உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

புவியியல் வல்லுநர் சி.பி. ராஜேந்திரன், கூறுகையில், இமயமலையின் மத்தியப் பகுதியில் 8.5 அளவில் நிலநடுக்கம் அல்லது அதற்கும் மேலான அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனை உறுதி படுத்தும் விதமாக இந்திய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட வரைபடத்தை பின்பற்றி கூகுள் எர்த் மற்றும் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவின் இஸ்ரோவின் கார்டோசாட் 1 செயற்கைக்கோளும் ஆய்வு நடத்தி இதனை உண்மை என ஆமோதித்துள்ளன. 

வருங்காலத்தில் மத்திய இமயமலை பகுதியில் 8.5 என்ற ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பேராபத்து உள்ளது எனவும், எச்சரிக்கையின்படி நிலநடுக்கம் ஏற்பட்டால் நேபாள - இந்திய எல்லை பகுதியில் இமயமலை 15 மீட்டர் வரை சரிய வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1315 மற்றும் 1440 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஏற்படக்கூடிய 8.5 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் தாக்கம் கிட்டத்தட்ட 600 கிமீ தூரம் வரையில் இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.  

இதுகுறித்து ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் அபாயத்தை கருத்தில் கொண்டு, இது ஒரு வளர்ந்து வரும் மக்கள்தொகை மற்றும் கட்டுப்பாடற்ற சூழலில் தடையின்றி விரிவாக்கப்படக்கூடிய ஒரு பகுதிக்கு பேரழிவு தரக்கூடியது, இந்த தற்செயலான ஆபத்தை சந்திப்பதற்கு மோசமான தயார்நிலைக்கு முரணாக இருக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

கொலராடோ பல்கலைக் கழகத்தில் அமெரிக்க புவியியலாளரான ரோஜர் பிலாம் கூறுகையில், இமாலயப் பகுதியில் நடுநடுக்கம் பற்றிய எச்சரிக்கை தற்போதைய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது, இது இந்திய ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பை முழுமையாக ஆதரிக்கிறது.

"நிலநடுக்கம் இப்போது நிகழ்கிறது என்று முடிவெடுக்கும்போது, அவற்றின் அளவு 8.5 க்கு சமமாக இருக்கக்கூடும்" என்று பிலாம் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments